Header Ads



எந்த அடிப்படைவாதியுடன் நாங்கள் மேடை ஏறமாட்டோம், எமது அரசியலாக அடிப்படைவாதத்தை மாற்றவும் மாட்டோம்

அடிப்படைவாதத்தை நிராகரிக்கும், தேசிய ஐக்கியத்தை எதிர்பார்க்கும் அரசியல் அமைப்புக்கு மட்டுமே நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

அடிப்படைவாதி ஒருவரின் தோளில் கைகளை போட்டுக்கொள்வது என்பது என்ன?. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

இதனால், எந்த அடிப்படைவாதியுடன் நாங்கள் மேடையில் ஏற மாட்டோம் என்பதுடன் எமது அரசியலாக அடிப்படைவாதத்தை மாற்றிக்கொள்ளவும் மாட்டோம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. முதல்ல எதய்யா அடிப்படைவாதம் & அடிப்படைவாதி யாரு என்று சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  2. உங்களுக்கு செல்லும் வாக்குகள் கோத்தாவை உயர்த்தும்.

    ReplyDelete

Powered by Blogger.