Header Ads



அரசியலில் இருக்கு ஒய்வுப் பெறப்போவதாக, வெளியாகிய செய்தியில் உண்மையில்லை

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தான் அரசியலில் இருக்கு ஒய்வுப் பெறப்போவதாக வெளியாகிய செய்தியில் உண்மை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அனைத்து அதிகாரத்தையும் சஜித்திற்கு வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.