Header Ads



பிரபாகரனே UNP யை அழித்தார், சஜித் ஜனாதிபதியாக தெரிவானபின் 10 ஆண்டுகள் அபிவிருத்தி

25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவர் பதவிக்கு வர முடியாதபடி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கட்சியை அழித்ததாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று -05- மாலை ஆரம்பமான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது தாக்குதல் நடத்தினால், நாட்டில் பொருளாதாரம் ஓரிடத்தில் ஸ்தம்பித்து போகும் என்பதை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிந்திருந்தார்.

இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

யுத்தம் முடிவடைந்து, 10 ஆண்டுகளுக்கு பின்னர், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சிக்காக உயிர் தியாகம் செய்த தலைவர்களை போன்ற தலைவரை கொண்டு வர சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சஜித் பிரேமதாச 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவான பின்னர், தொடர்ந்தும் 10 ஆண்டுகள் நாட்டை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

இதனை தடுத்து நிறுத்த பிரபாகரனுக்கோ, இந்திரனுக்கோ முடியாது. சிறிது காலத்திற்கு ஆட்சி செய்ய சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் பணிகளை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை .

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு தற்போது 51 வயது. அவர் நீண்டகாலம் காத்திருக்க முடியும். எனினும் நாட்டு மக்களுக்கு காத்திருக்க முடியாது.

சஜித் பிரேமதாசவின் அணியில் இருப்பவர்கள் எவரும் கொள்ளையிட மாட்டார்கள். எதிர்காலத்தில் அச்சமும் சந்தேகமும் இன்றி இதனை கூறி முடியும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.