Header Ads



ஜப்பானில் முதுமானிப் பட்டம் பெற்றார், காத்தான்குடி முஹம்மட் சுஹைல்

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் தாஜுதீன் முஹம்மட் சுஹைல் ஆகிய இவர் கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில்  பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளராக பணியாற்றி வருகின்றார். மேலும், அவர் ஒரு பட்டய பொறியியலாளர் ஆவார். 

இவர் ஜப்பான் நாட்டின் GRIPS பல்கலைக்கழகத்தினால் 2018/2019 ஆம் கல்வி ஆண்டிற்கான வெள்ள அனர்த்த முகாமைத்துவக் கற்கைநெறியை பூர்த்தி செய்து முதுமானிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இக்கற்கைநெறிக்கு இலங்கையிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு நபருமாவார். 

மேலும் இவர் இக்கற்கை நெறியில்  மிகச்சிறந்த  பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டதுடன் ஏனைய நாடுகளிலிருந்து பங்குபற்றிய பலருக்கு  மத்தியில் இந்த ஆண்டிற்கான “சிறந்த ஆய்வு விருதை" யும் தனதாக்கிக் கொண்டார்.

3 comments:

  1. MashaALLAH
    Congrats, we need more intellectuals to our country to be flourished

    ReplyDelete
  2. Masha Allah, Congratulations. Our society and our country to expect more intelligent same as for you.

    ReplyDelete
  3. Masha Allah, Congratulations. Our society and our country to expect more intelligent same as for you.

    ReplyDelete

Powered by Blogger.