ஐ.தே.கட்சியை அழித்தது பிரேமதாச, இப்போது சஜித் அழிக்க நடவடிக்கை
ரணசிங்க பிரேமதாச என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்த நபர் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் இன்று -29 நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து படித்தவர்கள், புத்திசாலிகளை ரணசிங்க பிரேமதாசவே விரட்டினார். அவருக்கும் சஜித் பிரேமதாசவுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.
ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை அழித்த பின்னர் இன்று வரை அந்த கட்சியால் மீள முடியாதுள்ளது. இரண்டாவது கட்டமாக சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
NEENGA PATTA KUDUKARAN
ReplyDeleteNEENGA THAN KUDUWAI SRILANKA WUKKU GOTHA MUULAM KONDUWANDHATHU.