Header Ads



மங்களவின் வீட்டில், இன்று மந்திராலோசனை

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் -14- ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் சஜித் இன்று சந்திக்க உள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் தொடர்புடைய சிறு கட்சிகள் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.

அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஏனைய கட்சிகளது ஆதரவினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரராக அறிவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகளவில் காணப்படுவதாகவும் நாளைய தினம் இது தொடர்பில் இறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் எனவும் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் பி.பி.சீ சிங்கள செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. திரு.சஜித் அவர்களின் நல்ல மனசுக்கு நல்லது நடக்கும் மிக விரைவில்.

    ReplyDelete

Powered by Blogger.