ரணில் - சஜித் விடாப்பிடி, தொடரும் இழுபறியால் பங்காளிகள் அதிருப்தி
(ரொபட் அன்டனி)
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி நிலைமை நீடித்துவருகின்ற சூழலில் விரைவில் இந்த விவகாரத்துக்கு தீர்வுகாண வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. பங்காளிக்கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தேசியக் கூட்டணியை விரைவில் ஸ்தாபிக்க வேண்டும்.
என்றும் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என்றும் பங்காளிக்கட்சிகள் வலியுறுத்திவருகின்ற நிலையிலும் வேட்பாளர் தெரிவானது தொடர் இழுபிறியிலேயே காணப்படுகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணிக்குள் வேட்பாளர் தெரிவிலும் ஜனநாயக தேசியக் கூட்டணி அமைப்பதிலும் நீடிக்கும் இழுபறி முரண்பாட்டு நிலைமை தொடர்பில் பங்காளிக்கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக இதுவரை உத்தியோகபூர்வமாக தெரிவிக்காவிடினும் அவர் அந்த தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக தெரியவருகின்றது.
அதேபோன்று கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவும் தாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். அவர் அதற்கான அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பதுளை மற்றும் மாத்தறை பிரதேசங்களில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி குருணாகலில் மற்றுமொரு கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு தனிப்பட்ட ரீதியில் கூட்டங்களை நடத்த வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அறிவித்துள் ள நிலையிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் வேட்பாளர் விடயத்தில் விட்டுக்கொடுக்காமல் இருக்கின்ற சூழலில் இழுபறி நிலை நீடித்து வருகின்றது.
வேட்பாளர் விடயத்தில் கட்சிக்குள் முரண்பாடு நிலவுவதாக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக கூறும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் மாலை தீவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அவர் நாடு திரும்பிய பின்னர் வேட்பாளர் விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படுமென ஐக்கிய தேசியக் டக்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வேட்பாளர் இழுபறி நிலை காரணமாக பாங்களிகட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக கூட்டணியை ஸ்தாபிப்பதிலும் தாமதம் நிலவி வருகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்ட பின்னரே ஜனநாயக கூட்டணி நிறுவப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ தரப்பு கூறிவருகின்றது. ஆனால் ஜனநாயக கூட்டணி நிறுவப்பட்டபின்னரே வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு கூறிவருகின்றது. இந்தப் பின்னணியிலேயே வேட்பாளர் விடயத்தில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் தொடர்ந்ரும் முரண்பாடுகள் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Fantastic if Ranil contests instead of Sajid. Anti Gota votes won’t get split between Anura and Sajid. Anura will grab all anti Gota votes and Ranil will finish as also ran.
ReplyDeletesorana illatha ranil
ReplyDelete