Header Ads



முஸ்லிம்களை கல்லால் அடித்துக் கொலை, செய்யலாமென்ற பௌத்த தேரரை விசாரியுங்கள்

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், கல்லால் அடித்துக் கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பதில் பொலிஸ்மா அதிபரிடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கோரியிருக்கிறது.

வரகாகொட ஞானரத்ன தேரர் முன்வைத்த கருத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவிற்கு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

2 comments:

  1. அப்பிடின்னா இலங்கைச் சட்டம் எல்லாருக்கும் ஒன்னுதானா?

    ReplyDelete
  2. இந்த சரவணமுத்து முஸ்லிம்களிடம் பணம் வாங்கிக கொண்டு இந்த வேலை பாக்கின்றார்

    ReplyDelete

Powered by Blogger.