Header Ads



நன்றிக் கடனுக்காக மகிந்த தரப்பு, மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவேண்டும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பல தியாகங்களை மேற்கொண்டுள்ளதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையே நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்கியதுடன், பின்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

மேலும் மொட்டின் உறுப்பினர்கள் பெற்ற நாடாளுமன்ற ஆசனத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாத்துக்கொண்டுள்ளது.

அதன்படி ஒரு கூட்டணியை அமைக்க மொட்டுடன் இணைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.