Header Ads



இலங்கையர் இந்தியாவில் வபாத்

-திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்  பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முயற்சி பேரில் மேட்டுபாளையம் நகர முஸ்லிம் லீக் நிர்வாகம் சார்பில் இலங்கை கல்முனையைச் சேர்ந்த யாமியத்துல்அரபு கலாசாறை மாணவர் அபதுல் றஹீம் அஜுத் ஜஹான் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை வாப்த்தானார். அவரது ஜனாஸாவை  கோவை மேட்டுபாளையம் காட்டூர் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் கப்ருஸ்தானில்  ஜானாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கை கால்முனை பகுதியை சேர்ந்த மர்ஹூம் அப்துல் றஹீம் மகன் அஜுத் ஜஹான் வயது (19 ) 
139 செய்லான் வீதி கல்முனைக்குடி 02 , இவர் கொழும்பில் உள்ள யாமியத்துல் கௌஸியா அரபு கலாசாளையில் படித்து வந்தார். அடுத்த வருடம் இவர் மவ்லவி பட்டம் நிறைவு செய்ய இருக்கிறார். 

இந்த நிலையில் இவருக்கு எலும்பு புற்று  நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை  மாவட்டம் மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ள கொழும்பு இருந்து கோவைக்கு விமான நிலையத்திற்கு வந்தார்கள். பின்னர் மேட்டுபாளையத்தில் உள்ள ஶ்ரீ செல்ல ஹெர்பல் ஆயுர்வேத மையத்திற்கு 25 ஆம் தேதி வியாழக்கிழமை வந்து மருத்துமனையில் தங்கி புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார்கள். இவருடம் அவரது அண்னண் அஜுத் ஜஹான்  மற்றும் மைத்துனர் முஹம்மது ஷிபான் ஆகியோர் உடன் வந்து இருந்து கவனித்து வந்தார்கள். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் நிலை மோசம் அடைந்து சிகிச்சை பலனின்றி வாப்த்தானார். பின்னர் இவரது உடலை என்ன செய்வது என்று தெரியாமல் அவரது அண்ணன் மற்றும் மைத்துனர் ஆகியோர் ஆலோசனை செய்து எப்படியாவது இலங்கை கல்முனைக்கு கொண்டு செல்லாமா அல்லது மேட்டுபாளையத்தில் அடக்கம் செய்து விடலாமா என்று கல்முனையில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஆலோசனை செய்து வந்த நிலையில் கல்முனைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. இவருடை தந்தை வபாத் ஆகி இரண்டு மாதங்கள் தான் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


7 comments:

  1. அல்லாஹ் சுவனத்தை வழங்குவானாக,

    ReplyDelete
  2. இன்னலிலஹி வஹின்ன ரஜுஹுன்
    எங்க அடக்கம் இந்தியாவா இலங்கையா

    ReplyDelete
  3. Inna Lillahi Wainna Ilai Rajioon

    ReplyDelete
  4. The person who sent the message to post in jaffna muslim,we need to teach him tamil language.written pattern is not correct.

    ReplyDelete
  5. யா அல்லாஹ் இவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவாயாக. இவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் , எல்லாவித றஹ்மத்தும் , பறக்கத்தும் வாரி அருள்வாயாக.
    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிஹூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹு ராஜிஊன், யாஅல்லாஹ் அன்னாருடைய பாவத்தை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில்சேர்த்துவைப்பாயாக, அன்னாருடைய குடும்பத்துக்கு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் அருளுவானாக. ஆமீன்.

    ReplyDelete
  7. Inna Lillahi Wa Inna ilayhi rajioon. May the almighty grant him Jannathul firdous, and required support to his family.

    ReplyDelete

Powered by Blogger.