கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஹரீஸ் விவகாரம், 2 வது தடவையும் ஹரீஸுடன் தொடர்புகொண்ட ரணில்
நேற்று திங்கட்கிழமை (29) மாலை நேரம் முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவியேற்ற நிலையில், அதன்பின்னர் ஆளும்கட்சி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் ஹரீஸ் மீண்டும் அமைச்சுப் பதவியை, ஏற்காத விடயம் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், ஹரீஸ் அமைச்சுப் பதவியை ஏற்காமை இதனால் அலிசாகிர் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் பதவிகளை ஏற்காத நிலை ஏற்பட்டமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் 2 ஆவது தடவையாக ஹரீஸுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.
அப்போது ஹரீஸ் பொதுமக்களுடனான கூட்டமொன்றில் பங்கேற்றிருந்த நிலையில், ரணிலுடன் பேசவில்லை எனவும் jaffna muslim இணையத்திற்கு அறியவருகிறது.
தமிழ் தரப்புடனும் Muslim தரப்புடனும் மாறி மாறி நடிக்கும் ரனிலுக்கு தக்க பதிலடி
ReplyDelete