Dr சாபிக்கு எதிரான வழக்கு, 27 ஆம் திகதி விசாரணை
வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெற்றுள்ள தகவல்கள் அடங்கிய ஓர் அறிக்கை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment