Header Ads



சாட்சியம் வழங்குமாறு பாராளுமன்ற, தெரிவுக்குழு ரணிலுக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.

இது தவிர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். 

நாடாளுமன்ற தெரிவுக்குழு, எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.