நாளை செவ்வாய்கிழமை பிறை பாருங்கள், ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள்
நோன்புப் நெருநாள் தினமான ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரியபள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
மேற்படி பள்ளிவாசலின் நிருவாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல் நிருவாகிகள் ஆகியோர் மெளலவி அப்துல் ஹமீத் பஹ்ஜியின் தலைமையில் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த தினம் தலைப்பிறையைக் கண்டவர்கள் 011 2432110, 077 7140939, 077 7316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கும்படி கேட்கப்படுகின்றனர்.
2
முஸ்லிம்கள் எவ்வித கொள்கை முரண்பாடுகளுமின்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலுக்கமைய ஒரே தினத்தில் நோன்புப் பெருநாளை நாடுமுழுவதும் கொண்டாட வேண்டுமென எம்.எச்.ஏ. ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கு நாட்டில் ஒரு சில பிரிவினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. எனவே இவ்வாறான சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் கொள்கை வேறுபாடுகளை மறந்து தூரநோக்குடன் செயற்பட வேண்டும். முஸ்லிம்கள் இனவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது ஒற்றுமையை காட்டுவதற்கு மிச்சிறந்த தருணமாக கொண்டு தயவு செய்து ஒன்றுபடுங்கள்.
ReplyDeleteகடந்த காலங்களில் ஜம்மியத்துல் உலமா அரசாங்க கட்டுப்பாட்டில் அரசாங்கம் கூறிய தினங்களில் பெருநாளை கொண்டாடியது
ReplyDeleteபொதுமக்கள் அறிவித்ததை புறக்கணித்தது என்று குற்றச்சாட்டு உள்ளது அது இல்லாமல் பிறை கண்டதும் அறிவித்தல் கொடுக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றோம் ஜமியத்துல் உலமா சபையினால் உங்களால்தான் சீர்கெட்டது பெருநாள் தினங்கள் இப்படிக்கு நல்லிணக்கம்.
ஜம்மிய்யத்துல் உலமாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள் கடந்த காலங்களில் பொதுமக்கள் பிறை கண்டதாக அறிவித்தும் அதை ஜம் இயத்துல் உலமா சபை நிராகரித்தது என்று மாபெரும் குற்றச்சாட்டு ஜமியத்துல் உலமாவின் மீது உள்ளது உங்களால் தான் பெருநாள் இரண்டாக பிரிந்து சீர்கெட்டது என்பது அனைவரின் கருத்தாகும் இதை பரிசீலனை செய்து மக்களுக்கும் இடையில் பிளவு வராமல் பாதுகாத்துக் கொள்வதே உலமா சபையின் கடமையுமாகும் நீங்கள் தவறு செய்யும் போது மக்கள் மத்தியில் பிளபுகள் ஏற்படுகின்றது.
ReplyDeleteதரீக்கா காரர்களுக்கு செவ்வாய் பெருநாள் யாரை ஒற்றுமை பட அழைக்கிரீர்கள்
ReplyDelete