Header Ads



றிசாத் பற்றிய, யானைகளின் தீர்மானம் இதுதான்

அமைச்சர் ரிசார்ட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய இறுதி தீர்மானத்தை எடுப்பார்கள் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு தற்போது விசாரணைகளை நடத்தி வருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.

அறிக்கையில் பரிந்துரைகளை ஆராய்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவான முடிவை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய செயற்படுவார்கள் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.