Header Ads



ஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது - ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம்


- திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது -

இலங்கை கிழக்கு, வடக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு  வருமாறு மு.க. ஸடாலினை திங்கட்கிழமை காலை சந்தித்த போது  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்தார்.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னைக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் திங்கட்கிழமை காலை தி.மு.க. தலைவர் மு.க. ஸடாலினை அவரது இல்லத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசினார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றதற்கு ரவூப் ஹக்கீம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் ரவூப் ஹக்கிமிக்கு மு.க. ஸடாலின் ரவூப் ஹக்கீம்க்கு நினைவு பரிசை வழங்கினார்.

இந்த சந்திப்பில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் விரைவில் தமிழக முதல்வராக வந்து மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கு நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று கூறினார். 

நீங்கள் விரைவில் இலங்கை வரவேண்டும் அங்குள்ள கிழக்கு மற்றும் வடக்கு மாகாண   மக்களையும் மலையக மக்களையும் நீங்கள் சந்தித்து உரையாட வேண்டும் . ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அழைப்பு கொடுக்கிறோம். 

மு.க. ஸடாலின் ரவூப் ஹக்கிடம் சமீபத்தில் இலங்கை நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை குறித்து கேட்டார் அதற்கு பதில் அளித்த ரவூப் ஹக்கீம் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசியல் பின்புலம் இருக்கிறது என்றும் விரிவாக எடுத்து கூறினார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. என்று விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இலங்கையில் நடைபெறும் பல்வேறு அரசியல் மற்றும் தமிழர்கள் நிலவரம் குறித்து விரிவாக பேசினார்கள். 

இந்த சந்திப்பின் போது சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, கிழக்கு மாவட்ட பொருளாளர் இசட். ஆசாத், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது,  நெல்லை மேற்கு மாவட்ட எம்.எஸ்.எப். பொருளாளர் ரவண சமுத்திரம் தமீம் அன்சாரி உள்பட பலர் உடன் இருந்தார்கள்.


No comments

Powered by Blogger.