Header Ads



நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்காத எந்த தரப்பினரும், தேசத்துரோகி என பெயரிடப்பட வேண்டும்

நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்காத எந்தவொரு தரப்பினரும் இனம், மதம் பேதமின்றி தேசத்துரோகி என பெயரிட வேண்டும் என இராணுவத்தின் 24வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரால் மகிந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட செயற்பாடுளை முன்னெடுக்க நாடு என்ற ஒன்று அவசியம்.

யுத்தத்தை நிறைவு செய்து 10 வருடங்களாக சுதந்திரமாகவும், சந்தோஷத்துடனும் வாழ்ந்து வந்தோம்.

அதனை இல்லாது செய்ய சில அடிப்படைவாதிகள் தற்போது நடவடிக்கை எடுக்கின்றனர்.

மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட நாங்கள் இடமளியோம்.

நாங்கள் பிளவுப்பட்டு பிரிந்து சென்றால் நாடு என்ற ஒன்று மீதமிருக்காது.

நாங்கள் இந்த நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்கின்றோம்.

எங்களுக்கு தேவையான விதத்தில் சட்டத்தை மாற்ற முடியாது.

சட்டத்திற்கு சகலரும் மதிப்பளிக்க வேண்டும்.

சட்டத்திற்கு மதிப்பளிக்காது, நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சகலரும் தேசத்துரோகிகளாக கருத வேண்டும் என இராணுவத்தின் 24வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரால் மகிந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. So what, pothupalasenaa is your partner?
    First arrest them. Then all will clear in srilanka.

    ReplyDelete

Powered by Blogger.