புதைக்கப்பட்டிருந்த புர்கா ஆடை, வெடிபொருட்களுடன் வீட்டு உரிமையாளர் கைது
வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சி.4 ரக வெடி பொருட்கள் 270 கிராம் மற்றும் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றையும் பொலிஸார் மீட்டதுடன், குறித்த வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
புத்தலைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, பிபிலைப் பகுதியின் கொன்கல்லந்த என்ற இடத்தில் அமைந்துள்ள வீடொன்றைச் சுற்றி வளைத்துத் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த பொதியைக் கண்டெடுத்துள்ள பொலிஸார் குறித்த பொதியிலிருந்து 270 கிராம் எடையுடன் கூடிய சீ. 4 ரக வெடிபொருட்களும், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றும் மீட்கப்பட்டது.
இதையடுத்து வீட்டுரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை, பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக புத்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர தெரிவித்தார்.
அரைகுறை செய்தி,
ReplyDeleteவீட்டு உரிமையாளர் முஸ்லீம் என்றால் அரவரின் பெயரை முஹம்மது அல்லது பாத்திமா என்று சொல்லிவிடுவார்கள். மாற்று மதத்தவர்கள் என்றால் பெயர்கள் வராது. இதுதான் தற்போதைய ஊடக தர்மம்.
Hahaha No name da saami
ReplyDeleteதிட்டமிட்டு ஒரு இனத்தின்மீது நடாத்தப்படுகின்ற அரசியல் விளையாட்டில் அரசாங்கத்திடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் நியாயத்தை எதிர்பார்ப்பது மடமை.
ReplyDelete