Header Ads



பின்கதவு வழியாக, பாராளுமன்றம் போன மைத்திரிபால - ஏன் தெரியுமா...?

மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நேற்று பின்கதவு வழியாக நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொழும்பில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்தினர்.

இதனால், நாடாளுமன்றச் சுற்றுவட்ட வீதி சிறிலங்கா காவல்துறையினரால் மூடப்பட்டது.

இதனால், நாடாளுமன்றத்துக்குச் செல்லும் அதிபரின் வாகன அணியின் பாதை மாற்றப்பட்டது.

நாடாளுமன்ற முன்வாயில் வழியாக செல்ல முடியாததால், பின்வாயில் வழியாக மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.

No comments

Powered by Blogger.