Header Ads



உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் 2019 - இலங்கையணி கெப்டனாக திமுத் கருணாரத்ன நியமனம்


உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை திமுத் கருணாரத்ன வழிநடத்தவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று -17- மாலை விடுத்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் நாளை (18) அறிவிக்கப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர் திமுத் கருணாரத்ன சர்வதேச ஒருநாள் அணியில் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்தாடுவதுடன், அந்தப் போட்டி ஜூன் மாதம் முதலாம் திகதி கார்டிப்பில் நடைபெறவுள்ளது.

1 comment:

  1. this drunken how gonna lead the team? he has no self discipline than how he will implement the discipline in the team? what a stupid decision of cricket selection board.

    ReplyDelete

Powered by Blogger.