ஜும்மா தொழுகை, பிரசங்கத்தை 20 நிமிடங்களுக்குள் வரையறுக்க தீர்மானம்
நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாளைய ஜும்மா தொழுகை மற்றும் பிரசங்கத்தை 20 நிமிட நேரங்களுக்கு வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம் அமீன் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இந்த தீர்மானம் நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் பிரார்த்தனை நடைபெறும்போது ஒரு குழுவினரை பள்ளிவாசல்களுக்கு வெளியே பாதுகாப்புக்கு நிறுத்துவது – ஏதேனும் அச்சுறுத்தல் நிலைமை வந்தால் அவர்கள் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார் .
Post a Comment