Header Ads



நான் சுதந்திரக் கட்சிக்காரனாகவே இறப்பேன்

ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நிறுத்துவர் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இன்று -22- செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ நான் இடதுசாரி அரசியல்வாதி. நான் முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இணைந்தேன். அந்த கட்சிக்காரனாகவே இறப்பேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படாவிட்டாலும் நான் மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்ள முடியாத தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவார் என நான் நம்பவில்லை.

மகிந்த ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தும் அனைவரையும் நான் ஏற்றுக்கொள்ளாத போதிலும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவரை ஆதரிப்பேன். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாது பழிவாங்கும் தலைவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.