பட்ஜட்டை தோற்கடிக்கும் வாய்ப்பை, மைத்திரிபால அணியினர் இல்லாமல்செய்து விட்டனர்
வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியின் உறுப்பினர்கள் இல்லாமல் செய்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தீர்மானத்தை கவனத்தில் கொள்ளாது, டிலான் பெரேரா, லக்ஷ்மன் வசந்த பெரேரா, நிஷாந்த முத்துஹெட்டிகம, ஸ்ரீயானி விஜேவிக்ரம ஆகிய 5 பேர் மக்கள் சார்பில் செயற்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment