Header Ads



"கொக்கேய்னும், ரஞ்சனும்" என்ற புதிய திரைப்படம்

ஒழுக்கமற்ற ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று -23- செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமது கடன் தவணைகளை செலுத்த முடியாத சிரமத்தில் தினமும் மூடப்படும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. பொருளாதாரம் முற்றாக நெருக்கடிக்குள் விழுந்துள்ளது.

எனினும் இவை அனைத்தையும் மக்கள் மறப்பதற்காக கொக்கேய்னும் ரஞ்சனும் என்ற புதிய திரைப்படம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் ரஞ்சன் ராமநாயக்க எழுதியுள்ளார்.

கொக்கேய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நேரடியாக ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும்.

புகழை தக்கவைக்க இப்படியான முட்டாள் வேலைகளை செய்யாமல் இருக்க வேண்டும். பிரசித்த பெற வேண்டுமாயின் காலிமுகத் திடலில் உள்ள மின்சார கம்பத்தில் ஏற வேண்டும்.
அரசியல் கட்சிகளின் ஒழுக்கம் இருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்கமற்ற கட்சியாக மாறியுள்ளது எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.