Header Ads



முஸ்லிம்கள் எந்த உரிமையையும் இழக்கவில்லை, அவர்களிடம் ஊருக்கு ஒரு அமைச்சர் என்ற நிலை

கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வியாழேந்திரன் வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சை எடுத்தமைக்கு துள்ளி குதித்து துரோகி பட்டம் சூட்டும் அளவுக்கு சென்றார்கள்.

இன்று ஊருக்கு ஒரு அமைச்சர் என்ற நிலை முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது. அது அவர்கள் அரசியல் சாணக்கியம்.

அவர்கள் இந்த நாட்டை யார் ஆண்டாலும் தங்கள் இனத்தை வாழ வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இராஜதந்திரமாக செய்து வருகிறார்கள்.

அவர்கள் அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையையும் இழக்கவில்லை. ஆனால் கிழக்கில் எம் மக்களின் நிலை? இரண்டு அற்ற நிலைக்கே தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்த வருடம் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தை அடுத்து ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களுக்கு தமிழ் தலைமைகள் முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.

அதிலும், ஜனாதிபதி தன்னுடைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாவிடினும் எதிர்க்க வேண்டாம் என்று கூறியும் தமிழ் தலைமைகள் அதனை எதிர்த்தன.

ஒருவேளை இதன் பிரதிபளிப்பாகவே இன்று ஜனாதிபதி இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்தாரா? அல்லது சிறிலங்கா சுதந்திர கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நிலையில் இப்பதவியை வழங்கினாரா? என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.

உண்மையிலேயே இன்று கிழக்கு தமிழர்களின் இருப்பு என்பது கேள்விக்குள்ளான நிலையில் தான் இருக்கிறது. இதற்கு தமிழ் தலைமைகளே பதில் சொல்லி ஆக வேண்டும்.

தேசியம் தேசியம் என்று மாத்திரம் பேசிக்கொண்டிருந்தால் அது எமது மக்களுக்கு முழுமையான தீர்வை தராது. உரிமை சார்ந்த அரசியலுடன் எமது மக்கள் தினமும் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

கிழக்கில் இன்று எத்தனையோ அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை தமிழர்களுக்கு கிடைப்பது என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்துள்ளது.

இதை எவ்வாறு எமது மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை பெற்றி சிந்திக்க வேண்டும். இதன்படி, ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நாம் எமது மக்களுக்குபெற முடிந்த சிலவற்றையேனும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது தீர்மானம்.

நாம் அரசியல் ரீதியாக ஒரு கல் எறிந்தால் நம்மை பல கற்கள் கொண்டு தாக்கும் அளவுக்கு தென்னிலைங்கை மாறியிருக்கிறது.

இதற்கு தமிழ் தலைமைகள் எடுக்கின்ற பல தீர்மானங்களே காரணமாகவுள்ளது. எனவே, இனிவரும் காலங்களிலாவது கிழக்கு தமிழர்களின் இருப்பு குறித்து கூட்டமைப்பு உட்பட்டு தமிழ் தலைமைகள் நினைவில் வைத்து செயற்படும் என நான் நினைக்கின்றேன்.

எது எப்படியோ ஆளுநர் நியமன விடயத்தில் ஜனாதிபதிக்கு நான் முழுமையான அழுத்ததைகொடுத்து எமது கிழக்கு மக்களின் இருப்பை காப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பேன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. ஏன் இந்த பாகுபாடு..மட்டக்களப்பு ஆஸ்பத்திரிய பாரக்கட்டும் கல்முன ஆஸ்ரப் ஆஸ்பத்திரியயும் பார்த்து பார்க்கட்டும்...எது அபிவிருத்தி.....இவங்க சும்மா டம்மி....எங்கட ஊர்ல பஸ் ஸ்டான்ட் இல்ல

    ReplyDelete
  2. இவர்களுடைய பொறாமையும் , பேராசையும் தான் இவர்களின் வீழ்ச்சிக்கு காரணம். இவர் 50 கோடி தருவதாக கூறியதும் தமிழ் மக்களின் நலன்களையும் , கட்சின் கோட்பாடுகளையும் மதியாமல் பணதிக்காக ஓடிப்போனவர்தான் இந்த அண்ணன்.

    ReplyDelete
  3. Hon Viyalendran,

    We are the majority in the Eastern Province and we have all the rights to have a Governor from the Muslim Community. Ethnic composition in the Eastern Province is:

    Muslims - 41%
    Hindus - 35%
    Buddhists - 20%
    Others - 4%

    Therefore please don't get jealousy about it and try for the best.

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னிர்கள் நன்றி வியாழேந்திரன் அவர்களே

    ReplyDelete
  5. yes .pillai pethu thallu ,ippa naanthan majority,we need LTTE or chase these mus to arabia

    ReplyDelete


  6. கிழக்கில் சதுரங்க வேட்டை ஆரம்பம்.
    - வ.ஐ.ச.ஜெயபாலன்
    .
    .
    திரு ஹிஸ்புழ்ழாஹ் பற்றிய தமிழரின் ஞாபகங்கள் ஓட்டமாவடியில் கோவில் சந்தையானதுபற்றிய ஒலிநாடாவையும் புல்லுமலை தண்ணீர் தொழிறசாலையும் தாண்டிவருவது இலகுவல்ல. இந்த நிலமை குறிப்பாக புல்லுமலை விவகாரம் ஊடாக ஜனாதிபதிக்கு நன்கு தெரிந்தவைதான்.
    .
    உற்று நோக்கும்போது ஜனாதிபதி தன்னை எதிர்த்த ஐதேக அணியையும் கூட்டமைப்பையும் கிழக்கில் சந்திக்க முடிவெடுத்துவிட்டது தெளிவாகப் புலப்படுகிறது.
    எனினும் வடகிழக்கில் மேற்க்கு நாடுகளையும் இந்தியாவையும் ஜப்பானையும் அனுசரித்துப் போக வேண்டிய சூழல் நிலவுவது ஒன்றும் இரகசியமல்ல. அதனால் ஜனாதிபதி செயல்படுத்தக்கூடிய முஸ்லிம்களையும் தமிழரையும் சமப்படுத்தி அதிகாரத்தைப் பகிரும் ஒரு சமன்பாட்டை
    ஜனாதிபதி உருவாக்கியிருக்கிறார் என்பதை ஊகிக்க முடிகிறது.
    .
    மேலும் தனது தெற்க்கில் தன்னைப் ஸ்திரப்படுத்த ஜனாதிபதிக்கு ஒரு பாராளுமன்ற வெற்றிடம் தேவைப்பட்டிருக்கலாம். சிங்கள பெளத்தக் கடும்போக்காளர்களும் சில சர்வதேச நாடுகளும் விக்கிலிக்கிஸ் உட்பட சஞ்சிகைகளும் ஓரிரு கிழக்கு நகரங்கள் பற்றி வெளிப்படுத்தும் எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க கிழக்கில் ஒரு முஸ்லிம் ஆழுனர் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அடிப்படை பின்னணி எதுவாக இருந்தாலும் இது ஒரு திருப்புமுனை நியமனமாகும். சுய விமர்சனத்தோடும் புதிய பரிமாணங்களோடு தமிழ்பேசும் மக்களின் ஆழுனராக மேம்பட முனைக என திரு ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை வரவேற்கிறேன்
    2
    நிலமைகளை உற்று நோக்கினால் இது
    கிழக்கில் மாகாண மற்றும் நாடாளு மன்றத் தேர்தல்களில் ஐதேக அணியையும் மாகாணசபைத் தேர்தலுல் தமிழர் கூட்டமைப்பையும் பாதிக்கக்கூடிய காய்நகர்த்தலாகவே தெரிகிறது. இது ஆரம்பம்தான் எனத் தோன்றுகிறது. அடுத்து தமிழர் ஒருவர் பதவி பெறக்கூடும். ரணிலுக்கு எதிராக நின்ற கிழக்கின் முஸ்லிம் தமிழ் தலைவர்களுக்கு கிழக்கு மாகாணசபையை பரிசாகக் கொடுக்க ஜனாதிபதி முடிவு செய்து காய் நகர்த்துவதுபோலத் தோன்றுகிறது.
    வட கிழக்கில் இந்தியா அமரிக்கா ஜப்பான் செயல்பாடுகளும் தெற்கில் சீனாவின் செயல்பாடுகலும் அதிகரித்துவரும் பின்னனியிலும் இதனை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. முஸ்லிம் ஆழுனர் தமிழ் முதலமைச்சர் என்கிற சமன்பாட்டை சர்வதேச அரகிலும் செல்லுபடியாக்கலாம் என ஜநாதிபதி கருதக் கூடும். அதற்கான சதுரங்க ஆட்டத்தின் முதல் காயை நகர்த்தியதாகவே தோன்றுகிறது. இது பிள்ளையான் காலத்து சதுரங்கம்தானே. அப்பவும் நாடாளுமன்றை கூட்டமைப்புத்தான் கைபற்றியது. இனி கிழக்கில் தமிழர்கள் வாகளிக்கும் முறை மாகானசபை தேர்தலில் அபிவிருத்தி நாடாளு மன்ற தேர்தலில் உரிமை என மாறிவருவதாக தோன்றுகிறது

    ReplyDelete
  7. பொறாமை துவேசம் உச்ச கட்டம்

    ReplyDelete
  8. @Jeyavarmen
    பிராபகரன் தலையை கொத்திப்போட்டது நியாபகம் இல்லையா? மீண்டும் ltte யை கேட்குறாய். உன்னைப்போன்ற முட்டாள் கூட்டம் இருக்கும் உன் சமுதாயம் கடைசிவரை இப்படி முஸ்லிம்களை பார்த்து பொறாமையில் சாக வேண்டியது தான்

    ReplyDelete
  9. Thuvesam pidichavanukku muslimgal melathan kan

    ReplyDelete

Powered by Blogger.