Header Ads



"ஹிந்து பக்­தி­வான்­க­ளை போராடி, காப்­பாற்­றி­ய ஞானசாரரை விடுதலை செய்க"

நாட்­டுக்­காகக் குரல் கொடுக்கக் கூடி­ய­வர்­களே எங்­க­ளுக்குத் தேவை. அந்த வகையில் கல­கொட அத்தே ஞான­சார தேரரை விடு­தலை செய்ய வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக “அரு­ணலு ஜனதா பெர­முன” அமைப்பின் தலைவர் டாக்டர் கிரிஷான்0 ராம சுந்­தரம் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் ஜனா­தி­ப­தி­யிடம் விடுத்­துள்ள கோரிக்கை வரு­மாறு:

ஜனா­தி­ப­தி­யிடம் மிகவும் பணி­வு­டனும் கரு­ணை­யு­டனும் கேட்­டுக்­கொள்­வது, இய­லு­மாயின் எங்கள் ஞான­சார ஹாமு­து­ருவை விடு­தலை செய்­யுங்கள். நீங்கள் சகல அதி­கா­ரங்­களும் பெற்­றுள்ள ஒரு ஜனா­தி­பதி. அதனால் உங்­களால் இதனை சாத்­தி­யப்­ப­டுத்­தலாம்.

எங்கள் ஹாமு­துரு, பெரிய தவ­றெ­துவும் செய்­ய­வில்லை அவர் இந்­நாட்­டுக்­கா­கவும் சிங்­க­ள­வர்­களைப் போன்றே தமிழ் மக்­க­ளுக்­கா­கவும் சிறு­பான்மை இனத்­திற்­கா­கவும் போரா­டி­யவர். யாழ்­பாணம், கொட்­டாஞ்­சேனை, வெள்­ள­வத்தை ஆகிய பிர­தே­சங்­களில் ஹிந்து பக்­தி­வான்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் எழுந்­த­போது, அவர் ஸ்தலத்­துக்குச் சென்று போராடி காப்­பாற்­றி­யுள்ளார். நான் அன்­னாரின் நண்­பனோ, தனிப்­பட்ட ரீதியில் ஆத­ர­வா­ளனோ அல்ல. ஆனாலும் அவ­ருக்கு நீதி­யொன்று வழங்­கப்பட் வேண்டும். அவர் கொலை போன்ற பெரிய தவறு எதுவும் இழைக்­க­வில்லை. அவர் நாட்­டுக்­கா­கவே கோஷம் எழுப்­பி­யுள்ளார். அதனால் ஆறு வரு­டங்கள் சிறை­வாசம் என்­பது அநீ­தி­யா­ன­தாகும்.

உங்­களை ஜனா­தி­ப­தி­யாக நிய­மிப்­ப­தற்­காக உமது அரு­ணலு ஜனதா பெர­முன கட்சி கூடிய அர்­ப்ப­ணிப்பு செய்­துள்­ளது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமோக வெற்­றி­யீட்­டு­வ­தற்கு எங்கள் கட்சி மகத்­தான பங்­க­ளிப்புச் செய்­துள்­ளது. நாங்கள் உங்­க­ளிடம் வேறெ­துவும் கோரு­வ­தற்­கில்லை. முடி­யு­மானால் எங்கள் ஞான­சார ஹாமு­து­ருவை எங்­க­ளுக்கு விடு­தலை செய்து தாருங்கள். அவர் இந்­நாட்டில் இருக்க வேண்­டிய ஒருவர். சில வேளை அவர் சற்று கடுந்­தொ­னியில் உரைத்­தி­ருக்­கலாம் அதனைத் தவறு என்று நாம் காண­வில்லை.

மட்­டக்­க­ளப்பில் இந்து மக்­க­ளுக்­காக சிலை­யொன்று திறக்க முடி­யா­தி­ருந்த சந்­தர்ப்­பத்தில் ஞான­சார ஹாமு­துரு தலை­யிட்டு அதனைப் பெற்றுத்தந்ததாக தமிழ் இந்து பக்திவான்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் கூட ஞானசார தேரர் தொடர்பாக தவறான கருத்துக்கள் ஏதும் இல்லை அவர் சரியானவர் என்றே அவர்கள் கூறுகிறார்கள்.
-Vidivelli

3 comments:

  1. சிங்களவனிடம் 50 வருடங்களாக நாயடிவாங்கியும் புரிந்துகொள்ளாத மொக்குகள் தான் இந்த தமிழ் பயங்கரவாதிகள். குறித்துவைத்துக்கொள்ளுங்கள் சிங்கள இனவாத சக்கரம் மிகவிரைவில் மீண்டும் தமிழன் பக்கம் திரும்பும். அன்று இந்த நாட்டில் நீங்கள் வாழ்ந்ததிற்கான தடையாமே இல்லாமல் போய்விடும்

    ReplyDelete
  2. ஞானசாரவை பின்னால் இருந்து முஸ்லிம்களுக்கு எதிராக இயக்கிவர்கள் இந்த பயங்கரவாதிகளே.

    ReplyDelete
  3. இவனெல்லாம் எப்படி டாக்டரானான்

    ReplyDelete

Powered by Blogger.