Header Ads



கரு - ரணில் இரகசிய, சந்திப்பில் நடந்தது என்ன..?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இடையே நேற்றிரவு அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேல் இருவரினதும் சந்திப்பு நீடித்ததாகவும் பின்னர் சபாநாயகர் வெளிநாட்டிற்கு பயணமானார் எனவும் தெரிவக்கப்படுகிறது.

இச் சந்திப்பில் 2019ஆம் ஆண்டிற்குரிய பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதியுடன் முரண்படாது ஆட்சியை முன்னெடுத்துச் செல்லுமாறு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துமாறு சபாநாயகர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விடுமுறையை களிக்க நாட்டை விட்டுச்  சென்றுள்ள இச் சந்தர்ப்பத்தில் பிரதமர் மற்றும் சபாநாயகரின் இரகசிய சந்திப்பு மைத்திரி மஹிந்த தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.