Header Ads



அம்பாறையில் கருவாட்டு, வியாபாரம் களைகட்டியது (படங்கள்)


குறிப்பாக கல்முனை காரைதீவு நிந்தவூர் பகுதியில் உள்ள கருவாட்டு கடைகளில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை காண முடிகின்றது.

காலநிலை மாற்றம் வெளிமாவட்ட மீன்கள் வரத்து குறைந்தமை காரணமாக கடல் மீன் நன்னீர் மீன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன்  கருவாட்டு வியாபாரம் களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு விற்கப்படும் கருவாடுகளில் நன்னீர் கருவாடுகளான சுங்கான் கிலோ 1400 ரூபாவும் செங்கணையான் கிலோ 1000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவை தவிர கடற்கருவாடுகளான சீலா கிலோ400 ரூபாவாகவும் கட்டா கிலோ 1200 ரூபாவாகவும் சூடை நெத்தலி சிரையா ஆகிய கருவாடுகள் தலா கிலோ 500 வீதம் விற்பனை யாகின்றன.

(எம்.என்.எம்.அப்ராஸ்)


No comments

Powered by Blogger.