Header Ads



பச்சை பொய்களை கிளப்பி விடுகிறார்கள் - ஆத்திரப்படுகிறார் அமீன்

மாவனெல்லை சம்பவம் தொடர்பில் முஸ்லிம்களில் சிலர் பச்சை பொய்களை பரப்பி வருவதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

முஸ்லிம்களில் சிலர் தமது வசதிற்கேற்ப தாம் ஆதரிக்கும் கட்சிகள் அல்லது இயக்கங்கள்  என்ற வட்டத்திற்குள் நின்றுபடி மாவனெல்லை சம்பவத்தை நோக்குகின்றனர். அவ்வாறே  சமூக ஊடகங்களில் தமது கருத்துக்களை பரப்புகின்றனர்.  இது முற்போக்கான செயற்பாடு அல்ல.

சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படும் நிலையில், பரப்பும் பொய்கள் சமூக மட்டத்தில் பாரிய சம்பவங்களை ஏற்படுத்திவிடலாம். எனவே சமூகத்தின் நலன்கருதியும், நாட்டின் நலன்கருதியும் நமது சமூகம் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டுமென்றார்

No comments

Powered by Blogger.