Header Ads



யானைகளுடன் மோதி, தடம்புரண்ட ரயில் - 3 யானைகளும் பலி


ஹபரனை மற்றும் பளுகஸ்வெவ ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் பாதையில் ரயிலுடன் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளதால்,மட்டக்களப்பு  ரயில் மார்க்கத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த யானைகள் ரயிலில் மோதியதையடுத்து, ரயில் தடம்புரண்டுள்ளதால், இதனை சீர் செய்யும் நடவடிக்கையில் ரயில்வே திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு வரை எரிபொருள் கொண்டுச் சென்ற ரயிலிலேயே இன்று -18- அதிகா​லை யானைகள் மோதி உயிரிழந்துள்ளதுடன், இதில் ஒரு யானை கர்ப்பமாக இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.