Header Ads



அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு..!


(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை சந்தியில் இருந்து புத்தளம். இலவங்குளம் செல்லும் பிரதான பாதையில் அமைக்கப்பட்ட பயணிகள் பஸ் தரிப்பிடத்தின் அவல நிலையினை பார்த்து முசலி மக்கள் கவலை அடைகின்றனர்.

மரிச்சிகட்டி மற்றும் மரைக்கார் தீவு மீ;ள்குடியேற்ற கிராம சந்தியில் அமைக்கபட்ட தப்பிடம் பராமரிப்பு இல்லாமல் பாம்புகள் மிருங்கள் தங்களின் உறைவிடமாக பயன்படுத்தும் நிலையில்  உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் 

முசலி பிரதேச சபை கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி கொண்டு வருகின்றது இன்னும் அதிகமான சந்திகளில் தரிப்பிடம் இல்லாமல் பொது மக்கள் மழையிலும்  வெயிலும் கஸ்டப்படுகின்றனர்.

முசலி மக்களின் வாக்குகளை கொள்ளை கொண்டவர்கள்  மக்களின் நலன் முன்னேற்றம் குறித்து பேசுவதில்லை என வாக்களித்த மக்கள் கவலை அடைகின்றனர் மக்களின் நலன் விடயத்தில் அதிகாரிகள் அரசியல்வாதி கவனம் செலுத்தப்பட வேண்டும் என மக்கள் வேண்டிகொள்கின்றனர்.





1 comment:

  1. பல இடங்களில் பிரயாணிகள் தரிப்பிடம் இல்லாதிருக்கும் நிலையில் இப்படியான ஒரு வசதி கிடைத்திருப்பதே அதிஷ்டம். இதை துப்புரவு பண்ணி பாதுகாக்கின்ற வேலையையாவது பொதுமக்கள், நலன்விரும்பிகள், இதைப் பயன்படுத்துவோர் மேற்கொள்ளக் கூடாதா? இதையும் அமைச்சர்தான் செய்ய வேண்டுமா? ஸலாம்

    ReplyDelete

Powered by Blogger.