Header Ads



பெண்கள் மட்டுமே பங்குபற்றும் ஹஜ்ஜுப்பெருநாள் கவியரங்கம்!


இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நடத்தும் 'ஈதுல் அல்ஹா' ஹஜ்ஜுப்பெருநாள் விஷேட கவியரங்கம் பெருநாள் தினத்தன்று (27ஆம்திகதி சனிக்கிழமை) முற்பகல் 10.30மணிக்கு இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும்.

முற்றிலும் பெண் கவிதாயினிகள் நால்வர் இக்கவியரங்கில் பங்குபற்றுகின்றனர். இலங்கை வானொலி அறிவிப்பாளரான திருமதி ஷாமிலா முஸ்தீன் தலைமையில் இடம் பெறும் இக்கவியரங்கில் அரசாங்க தகவல் அதிகாரியான கலாபூசணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ,சுஹைதா கரீம், சர்மிளா ஸெய்யத் ஆகியோர் பங்குபற்றுகின்றனர் .

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பணிப்பாளர் அல்ஹாபிஸ் எஸ் .எம்.ஹனீபாவின் ஆலோசனையின் பேரில் நடைபெறும் பெண்கள் கவியரங்கினை முஸ்லிம் சேவை நிகழ்ச்சி தயாரிப்பாளரான ஏ.எம்.எம். ரலீன் தயாரித்தளிக்கிறார்.

No comments

Powered by Blogger.