நல்லிணக்கத்தின் உண்மையான மதிப்பை இலங்கை நன்கு அறியும்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த திருப்புமுனை உடன்படிக்கையானது, பேச்சுவார்த்தையே மனிதகுலத்தின் மிகப்பெரிய பலம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. பிரிவினையால் ஏற்படும் இழப்புகளையும், நல்லிணக்கத்தின் உண்மையான மதிப்பையும் இலங்கை நன்கு அறியும்.
அமைதி என்பது வெறும் போர் இல்லாத நிலை மட்டுமல்ல் அது நம்பிக்கை, கண்ணியம், வாய்ப்புகள் மற்றும் நமது பிள்ளைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தை மரபுரிமையாகப் பெறுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் இருப்பாகும். உலக மக்கள் அனைவரும் இதற்கு குறைவில்லாத உன்னதமான வாழ்விற்கே தகுதியானவர்கள். எங்கும் அமைதி நிலவட்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Post a Comment