Header Ads



தானாக ஓடிய ரயில் - பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது


குருணாகல் ரயில்  நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த களனி குமாரி என பிரபலமாக அழைக்கப்படும் ரயில், ஓட்டுநர் எவருமில்லாமல் தானாகவே முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதேநேரத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மீனகயா அதிவேக ரயிலுடன் மோதவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


ரயில் பிரேக் செயலிழந்ததால், அது எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி பொத்துஹெர திசையை நோக்கி தானாகவே நகரத் தொடங்கி, நிறுத்த கடுமையாக முயற்சித்த போதிலும்,  கட்டுப்பாடின்றி நகர்ந்து, குருணாகல் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள நைலிய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மலை போன்ற மேடான பகுதியில் ஏறி தானாகவே நின்றுள்ளது. 

No comments

Powered by Blogger.