செம்மணி மனித புதைகுழியில், 405 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றும் (21) ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.
அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளில், 405 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் அவற்றில் 377 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
-. பிரதீபன்-

Post a Comment