Header Ads



இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுக்க நடவடிக்கை


16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், Mp  பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 


சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 


இந்தச் சட்டத்தின் மூலம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சரான சிறுவர் விவகார அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் கிடைக்கிறது. 


அத்துடன், ஒரு பிள்ளை ஒரு நாளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய நேரத்தைச் சுருக்குவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கான குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிப்பதற்கோ இந்தச் சட்டத்தின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 

No comments

Powered by Blogger.