2.5 மில்லியன் டொலர் மோசடி: நிதி அமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் நிதி மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்காக, 2026 ஏப்ரல் இறுதியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச் (ERD) சேர்ந்த அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அஸ்திரேலியக் கடன் வழங்குநர் ஒருவருக்கு வழங்கப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் நிதியை, சைபர் மோசடி மூலம் திசைதிருப்பியமை தொடர்பான விசாரணைக்காக நான்கு சிரேஷ்ட அதிகாரிகளை அரசாங்கம் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்திருந்தது.

Post a Comment