ரமழான் (23) கேள்வி
A, இஸ்லாமியச் சட்டத்தில் ஒரு புதிய பிரச்சினைக்கு குர்ஆன், ஹதீஸில் நேரடித் தீர்வு இல்லாதபோது 'கியாஸ்' (ஒப்புமை) எனும் முறையைப் பயன்படுத்துவர். இதற்கு நான்கு அடிப்படைத் தூண்கள் உள்ளன. உதாரணமாக: மது (அசல்), அதன் சட்டம் ஹராம் (ஹுக்ம்), புதிய போதைப்பொருள் (ஃபரஃ). இந்த மூன்றையும் இணைக்கும் ஒரு பொதுவான காரணி அங்கே இருக்க வேண்டும். மதுவுக்கும் அந்தப் புதிய போதைப்பொருளுக்கும் இடையில் இருக்கும் அந்தப் "பொதுவான காரணி" (உதாரணமாக: போதை தருதல்) இருந்தால் மட்டுமே அந்தச் சட்டம் செல்லுபடியாகும். ஒரு சட்டத்தை மூலத்திலிருந்து கிளைக்குப் பயன்படுத்துவதற்கு அடிப்படையாக அமையும் அந்த "பொதுவான காரணியை" அல்லது "நோக்கத்தை" உஸூலுல் பிக்ஹ் கலைச்சொல்லில் எவ்வாறு அழைப்பார்கள்?
B, ஒரு ஹதீஸ் நபிகளாரிடமிருந்து நமக்கு வந்து சேர்ந்த வழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அது இரண்டாகப் பிரிக்கப்படும். எண்ணிக்கையற்றவர்களால் அறிவிக்கப்பட்டால் அது 'முதவாதிர்'. குறைந்த எண்ணிக்கையிலானவர்களால் அறிவிக்கப்பட்டால் அது 'ஆஹாது' எனப்படும். 'ஆஹாது' ஹதீஸ்களில், ஒரு ஹதீஸை அதன் அறிவிப்பாளர் தொடரின் ஒவ்வொரு கட்டத்திலும் குறைந்தது மூவர் அறிவித்திருந்தால், அந்த ஹதீஸ் வகை எவ்வாறு அழைக்கப்படும்?

Post a Comment