Header Ads



ரமழான் (22) கேள்வி

A, ரமழான் நோன்பு நோற்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். ஆனால், பிரயாணிகள் மற்றும் நோயாளிகளுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதி உண்டு. அவர்கள் விடுபட்ட நோன்புகளைப் பின்னர் நோற்க வேண்டும். வயோதிபம் அல்லது தீராத நோய் காரணமாக ஒருவரால் நோன்பு நோற்கவே முடியாது என்ற நிலை இருந்தால், அவர் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதற்கு பிக்ஹ் கலைச்சொல்லில் என்ன பெயர்?


B, ஹுதைபியா ஒப்பந்தத்திற்குப் பிறகு, நபிகளார் (ஸல்) அவர்கள் உலக நாடுகளின் அரசர்களுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதங்கள் அனுப்பினார்கள். ரோமாபுரி, பாரசீகம், எகிப்து போன்ற நாடுகளுக்குத் தூதர்கள் சென்றனர். ரோமாபுரி (Byzantine) பேரரசர் ஹிராக்ளியஸிடம் (Heraclius) நபிகளாரின் கடிதத்தைக் கொண்டு சென்ற அந்தத் தூதர் (நபித்தோழர்) யார்?



No comments

Powered by Blogger.