கோழி இறைச்சியின் விலையை 1,250 ரூபாய் மட்டத்தில் பேணுவதற்கு திட்டம்
சந்தையில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சியை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் உலக சந்தையில் விலங்கு உணவுகள் விலை அதிகரிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியிலும், கோழி இறைச்சியின் விலையை 1,250 ரூபாய் மட்டத்தில் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், விலை நிர்ணயம் குறித்து அவர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
சந்தையே தீர்மானிக்கும்: விலையை உற்பத்தியாளர்கள் தீர்மானிப்பதில்லை, சந்தையின் தேவையே (Demand) தீர்மானிக்கிறது. டீசல் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த மேலதிக சுமையை உற்பத்தியாளர்களே ஏற்க வேண்டியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் விநியோகம் பாதிக்கப்பட்டால் மட்டுமே விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான தட்டுப்பாடுகள் ஏற்படாத பட்சத்தில் விலையை ஸ்திரமாக வைத்திருக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

Post a Comment