Header Ads



சட்டத்தரணியும் மனைவியும் படுகொலை - அமைச்சர் கூறிய தகவல்கள்


அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை இன்று (20) இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார். 


குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குற்றத்திற்காக துப்பாக்கிகளை வழங்க வந்த வாகனம் கொட்டாவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. 


துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குற்றத்தைச் செய்வதற்கு முன்னர் தங்கியிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்ற வாகனத்தைக் கைப்பற்றுவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, அதன் உரிமையாளர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். 


அதேபோல், இந்த குற்றத்தைச் புரிவதற்காக கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேக நபர், இலக்கம் 102/9, விகாரை வீதி, மீவல, ருக்கஹவெல பகுதியைச் சேர்ந்த ரூபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


அவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்ற வாகனத்தின் உரிமையாளர், காலி பகுதியைச் சேர்ந்த வன்னி ஆரச்சிகே சிஹின தில்சர எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதன்படி, அந்த சந்தேக நபரையும் குறித்த வாகனத்தையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.