Header Ads



இந்தியா குறித்த தனது பழைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது - ரில்வின்


இந்தியா குறித்த தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று JVP  செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


இந்தியாவுக்கு எதிரான ஜே.வி.பி.யின் மோதல் நிலைப்பாடு கடந்த காலத்தில் இருந்த ஒரு விடயம். 


தற்போது ஆட்சியில் உள்ள NPP யை வழிநடத்தும் ஜே.வி.பி, தற்போது இந்தியாவை ஒரு நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும் கருதுகிறது .


தான் புது தில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் "மிகவும் நட்புரீதியான கலந்துரையாடல்" ஒன்றை நடத்தியது. தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையை மீட்டெடுப்பதில் இந்தியாவின் பங்களிப்பிற்கும் அவர் நன்றிகளை கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.