நீரில் மூழ்கிய சோமாவதிய - சுங்காவில
சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளது.
இன்று காலை 9.15 மணி நிலவரத்தைக் கருத்திற்கொண்டு வெளியிடப்பட்ட உரிய அறிவிப்பின்படி, சுங்காவிலவில் இருந்து சோமாவதிய புனித பூமி வரையான வீதி சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக, குறித்த வீதி இலகுரக வாகனங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment