மேடைகளில் பேசும் அநுரகுமார தாம் இல்லை என்பதை ஜனாதிபதி இப்போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தற்போது மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து சக்திகளையும் பகைத்துக்கொண்டுள்ளதாக திலித் ஜயவீர Mp தெரிவித்துள்ளார்.
செல்லும் இடமெல்லாம் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு உதவி வழங்கப்படுவதாயின், அது முழுமையாக அரசியல் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், மாற்று அரசியல் கருத்து கொண்டவர்களை தண்டிக்கும் வழிமுறையை நோக்கியே தற்போது செல்வதாகத் தோன்றுகிறது.
தகரம் ஒன்று சேதமடைந்தாலும் நாம் 5 இலட்சம் வழங்குவோம் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் மக்களுக்கு நம்பிக்கையளித்தார். மேடைகளில் பேசும் அநுரகுமார தாம் இல்லை என்பதை ஜனாதிபதி இப்போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இதுவே. அதைத்தான் நான் முன்மொழிகிறேன். ஆகக்குறைந்தது இந்த மே தினத்திலாவது, இதனை இப்படியே முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று இந்த அரசாங்கத்திற்கு ஒரே குரலில் கூற வேண்டும்.

Post a Comment