Header Ads



கடற்கரையில் போதைப் பொருள் மீட்பு


இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கியுள்ளது. 


சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு பொதி இவ்வாறு கரை ஒதுங்கிக் கிடந்துள்ளது. 


இந்நிலையில், கடற்கரைக்கு அருகில் இருந்த சுற்றுலா ஹோட்டல் ஊழியர்கள் இதைப் பார்த்து, பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்துள்ளனர். 


இந்தப் பொதி கடலில் மிதந்து வந்ததா? அல்லது யாரேனும் ஒரு நபரால் இங்கு கொண்டு வந்து போடப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.