Header Ads



பொத்­துவில் இஸ்­ரே­லி­ய சபாத் இல்லத்திற்கு பூட்டு


பொத்­துவில் அறுகம்பே பகுதியில் இயங்கி வந்த இஸ்­ரே­லி­யர்­களின் சபாத் இல்லம் பூட்­டப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் தெரி­வித்தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­புக்கு அமை­வா­கவே சவாளை பிர­தே­சத்தில் P/05 கிராம பிரிவில் இயங்கிக் கொண்டு வந்த இஸ்­ர­வே­லர்­களின் வணக்­கஸ்­த­ல­மான சபாத் இல்லம் கடந்த 10 ஆம் திக­தி­யன்று பூட்­டப்­பட்­டுள்­ளது.


கோமாரி பிர­தே­சத்தில் இடம்­பெற்ற நீர்­வ­ழங்கல் திட்­டத்தை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்­வொன்­றின்­போது, அம்­பாறை மாவட்ட பொலிஸ்மா அதிபர் இதனை உறு­தி­ப­்படுத்­தி­ய­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மேலும் தெரி­வித்தார்.


முன்­ன­தாக குறித்த சபாத் இல்லம் மூடப்­பட வேண்டும் என அம்­பாறை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக் கூட்­டத்­திலும் பொத்­துவில் பிர­தேச சபை­யிலும் தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­டது. பின்னர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ்.உது­மா­லெப்பை, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்­டோரும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். இதற்கு, குறித்த சபாத் இல்­லத்தை மூடு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. அந்த அடிப்­ப­டையில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அறு­கம்­பேயில் இயங்­கி­வந்த இஸ்­ர­வே­லர்­களில் வணக்­கஸ்­தலம் இப்­போது பூட்­டப்­பட்­டுள்­ளது.


மேலும், பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜ­ய­பால, அமைச்­சி­னு­டைய செய­லாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் இந்த விடயத்தோடு சம்மந்தப்பட்ட அனைவருக்கும் இதுவிடயத்தில் தான் நன்றி தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் மேலும் தெரிவித்தார். – Vidivelli

No comments

Powered by Blogger.