அரசாங்கத்தால் இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளது
அநுராதபுரம் விலச்சிய பி்ரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தற்சமயம் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளும் அல்லது நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆளும் தரப்பினர் பிரதேச மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மக்கள் படும் வலியையும் துன்பத்தையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவர்களின் வலியையும் துன்பத்தையும் நாம் புரிந்து கொண்டுள்ளோம். மக்களுக்கு நாம் ஏதாவது செய்யும்போது, பொருட்களை விநியோகிக்கிறோம், நிவாரணங்களை விநியோகிக்கிறோம், அதை பகிர்ந்தளிக்கிறோம், இதை பகிர்ந்தளிக்கிறோம் என பகிர்ந்தளிக்கும் அரசியலில் ஈடுபடுகிறோம் என்று நம்மைப் பார்த்து கேலி செய்தனர். அவ்வாறு சொல்பவர்களுக்கு அரசியல் செயல்பாட்டின் பரந்த அர்த்தம் புரியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அரசியல் என்பது நாட்டுக்கு சேவை செய்யும் விடயமாகையால், எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் இவற்றை நிறுத்த மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Post a Comment