Header Ads



ஓட்டுநர் கீர்த்தி பண்டாராவின் மூச்சு...


தன்னை நம்பி வந்த பயணிகளை தனது உயிரை கொடுத்து  காப்பாற்றிய ஓட்டுனர் கீர்த்தி பண்டார. இன்றும் அவரது பெயர் நிலைத்துள்ளது

பேருந்தின் பிரேக் செயல்படவில்லை. 

25 உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பு 

ஓட்டுநரின் கைகளில் இருந்தது. மேலும் 

சில மீட்டர் முன்னால் சென்றால், ஆயிரம் 

அடிக்கும் மேலான செங்குத்தான 

பள்ளத்தாக்கில் பேருந்து புரண்டுவிடும்.

"பிரேக் செயல்படவில்லை. 

அமைதியாக, அனைவரும் 

பின்னால் செல்லுங்கள்  என்றார்."

ஓட்டுநரின் குரல் கேட்டவுடன், பேருந்தில் இருந்த அனைவரும் பின்னால் சாய்ந்தனர்.

கீர்த்தி பண்டாராவுக்கு செய்ய ஒரே ஒரு விஷயம் தான் இருந்தது. பள்ளத்தை அடையும் முன், தனது ஓட்டுநர்  பக்கத்தை மலை பக்கம் சென்று மோத வேண்டடும்  அதனையே அவர் செய்தார்

வேகமாக வந்த பேருந்து மலையில் மோதி ஒரே மூச்சில் நின்றது. மக்கள் பேருந்தில் இருந்து இறங்கி தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டனர். ஆனால் ஓட்டுநர் கீர்த்தி பண்டாராவின் மூச்சு  நின்றது .😥

 அவரின் இந்த செயலினால் ஒரு வீரனாக இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார்.

இவ்வாறான சாரதிகள் 

என்றும் போற்றப்படுவர் .

மக்களை காப்பாற்றும் திறன் மட்டும் போதாது, அனுபவம் வேண்டும்.. 

கீர்த்தி போன்ற மனிதர்கள் 

இன்னும் பிறக்கட்டும்..!!!


No comments

Powered by Blogger.