அச்சத்தால் தான் எதிர்க்கட்சியினர் ஓரணியில் இணைந்து வருகின்றனர் - அமைச்சர் நளிந்த
NPP அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது. சில ஒன்றிணைவுகள் அச்சம் காரணமாகவே ஏற்படுகின்றன. பாதாளக் குழு உறுப்பினர். கைது பயத்தில் ஒளிந்திருந்தனர். இதனால் அனைவரையும் கூண்டோடு கைது செய்வதற்கு காவல்துறையினரால் முடிந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம் தான் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று கூட வைத்தது. அவ்வாறு தான் எதிர்க்கட்சிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த அச்சத்தால் தான் எதிர்க்கட்சியினர் ஓரணியில் இணைந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு ஒடுக்க வேண்டிய நோக்கமும் - தேவையும் எமக்கில்லை. ஆனால், எத்தனை தரப்புகள் ஒன்றாக இணைந்தாலும், சட்டம் நடைமுறையாகியே தீரும்.
- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ -

Post a Comment