வரலாறு இவ்வாறு பதிவு செய்யும்..
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் எண்ணெய்க் கடல்கள் இருந்தும், காஸா மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ்களுக்கும் எரிபொருள் இல்லாமல் போனது.
50 மில்லியனுக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் இருந்தும், ஒரு வீரரைக் கூட காஸாவுக்கு அனுப்பாமல், இனப்படுகொலையைத் தடுக்காமல் முஸ்லிம் நாடுகள் அமைதி காத்தன.
கோடிக்கணக்கான பணம் ஆடம்பர நடன நிகழ்ச்சிகளுக்குச் செலவழிக்கப்பட்டபோது, காஸாவில் ஒரு ரொட்டித் துண்டுகூட இல்லாமல் மக்கள் பட்டினியால் வாடினர்.
துருக்கி இஸ்லாத்தின் பெயரைப் பலமுறை உச்சரித்த போதும், காஸாவில் நடந்த படுகொலைகளைத் தடுக்க முன்வரவில்லை.
பெப்சி மற்றும் கோகோ கோலா போன்ற எதிரிகளின் தயாரிப்புகளைப் புறக்கணிக்காத முஸ்லிம் சமூகத்தையும் வரலாறு பதிவு செய்யும்.
மேற்கத்திய நாடுகள் இனப்படுகொலைக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடியபோது, முஸ்லிம்களும் அவர்களது மார்க்க அறிஞர்களும் வீடுகளில் அமர்ந்து அற்பமான விசயங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர். காஸாவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
காஸாவும் அதன் மக்களும் அழிந்துபோகும்போது, ஆட்சியாளர்களையும், ஆளப்பட்டவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
இறுதி நாளில் அனைவரும் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் யார் வெற்றி பெற்றவர்கள் என்பது தெரியவரும்.
பரப்புங்கள். மௌனம் ஒரு துரோகம்!
உலகம் விழித்தெழுந்து கொண்டிருக்கிறது!
Muhammed Ashkar Ponnambath Maliackal

Post a Comment